நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…

126

மிஷன் சாப்டர்-1 படத்தின் வாயிலாக பொங்கலை அதிரவைத்த ‘ஃபைட் மாஸ்டர்’ சில்வா !!

சமீபமாக பொங்கல் திருநாளில் வெளிவந்த ‘கேப்டன் மில்லர்’,’அயலான்’,’மெரி கிரிஸ்துமஸ்’, ‘ஹனுமான்’ மற்றும்  ‘மிஷன் சாப்டர்-1’ ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்‌ஷன் படமாக ‘மிஷன் சாப்டர்-1’ இடம் பெற்றுள்ளது.

மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை  பார்க்கும் பொழுது ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற பிரம்மிப்பை ஏற்படுத்தியதை நாம் மறுக்க இயலாது.

பொதுவாக படத்தில் சண்டை என்றால் நாயகருடன் ஒருவர் அல்லது நான்கு ஐந்து பேர் மோதலாம். ஆனால் இந்த மிஷன் படத்தில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட்  நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள் படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி இருக்கிறது ? என்று கேட்டால் படத்தில் சண்டை காட்சிகளில் வெளுத்து கட்டியிருக்காங்க என்றும்,சண்டைக் காட்சிகள்  மிகப் பிரமாண்டமாக இருக்கின்றது… என்றும்  ஒட்டுமொத்த ரசிகர்களும் சொல்கிறார்கள்.

இப்படத்தில் , ஜெயிலராக நடித்திருக்கும்0 எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்க விட்டிருக்கிறார். இதற்கு எல்லாம் காரணம் சண்டை பயிற்சி இயக்குனர்  ‘ஸ்டண்ட்’ சில்வா தான்!

‘ஸ்டண்ட் ‘ சில்வா,இவர் இந்திய சினிமாவில் ஒரு மிக சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்,ஸ்டண்ட் நடிகர், மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.இந்தியாவின் மிக சிறந்த வெற்றிபட இயக்குனரான S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் NTR நடிப்பில் வெளி வந்து ஆக்‌ஷனில் மிக பெரிய வெற்றி அடைந்த ‘எமதொங்கா’ படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்கனராக அறிமுகமாகி தமிழ்,தெலுங்கு,மலயாளம்,கன்னடம்,ஹிந்தி,மராட்டி,பெங்காலி,மற்றும் சிங்களம் … என பல மொழிகளிலும் 300 படங்களுக்கு மேலாக சண்டைபயிற்சியாளராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே.

அஜித் நடிப்பில் வெளிவந்த ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஸ்டண்ட் சில்வா. அதன் பிறகு அதே அஜித்துடன்  அருண் விஜய் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம் சும்மா திரையில் அதிர வைத்திருப்பார். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டு மென்றால் நடிகர் அருண் விஜய்க்கு இந்த  திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்து
தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருவதற்கு இந்த படத்தின் சண்டைக் காட்சிகளும் ஒரு காரணம் என்பதும் உண்மை.

பொதுவாகவே அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரைக்கும் சினிமாவில் வில்லனாக நடிக்கும் எல்லோரும் நிஜத்தில் நல்லவர்கள் தான் அந்தவிதத்தில் ஸ்டண்ட்சில்வாவும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல.

பார்ப்பதற்கு சுருள் சுருளான் தலை முடியுடன் முகத்தில் தழும்புகளுடன் கரடு முரடாக காட்சியளிக்கும் இந்த ஸ்டண்ட் சில்வாவின்   மனம் அதிகம் அப்பபழக்கற்றது. இது பார்ப்பவர்களுக்கு  தெரியாது, ஆனால்  அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும் .

இதற்கு சான்றாக இவர்  தமிழில் இயக்கிய முதல் திரைப்படம்  ‘சித்திரை செவ்வானம்’ சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின்  தங்கை பூஜா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி ., அப்படம் பார்த்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகப்பெரிய எமோஷனல் வெற்றி படமாக  அமைந்தது.

இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு  பாதுகாப்பாக  வளர்க்க வேண்டும்  என்றும் , சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்பதும் ., உள்ளிட்ட உன்னதமான கருத்துகளை சொல்லி,இந்தப்படத்தை ஒரு சாதாரண படமாக இல்லாமல்   மிகபெரிய பாடமாக செதுக்கியிருந்தார்.

‘சித்திரை செவ்வானம்’ படத்தை இயக்கிய பிறகு  ஏற்கனவே ஒப்புக்கொண்ட  பல  படங்களின் ஸ்டண்ட் இயக்குனர் பணி இருந்ததால் இவரால் அடுத்தடுத்து உடனே  படங்கள் இயக்க முடியவில்லை.

இந்த 2024 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான  அதிரடி ஆக்க்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்க போகிறாராம் ‘ஸ்டண்ட்’ சில்வா.

“செய்யும் தொழிலே தெய்வம் என்றும் தான் செய்யும் தொழிலுக்கு என்றைக்குமே உண்மையாக இருக்க வேண்டும் “என்பதே இவருடைய கொள்கை.

இதுவே இவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.

எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையை சிறப்பாக  செய்து முடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி அடிப்பதில் வல்லவரான ‘ஸ்டண்ட்’ சில்வாவுக்கு இந்த பொங்கலில் வெளிவந்து சண்டை காட்சிகளால் பெரிதும் பேசப்பட்டு வரும் ‘மிஷன் சாப்டர் -1’ படத்தின் வெற்றியை  தொடர்ந்து அவரின் திரையுலக வாழ்வில் இனி வெற்றி மட்டுமே நிறைந்திருக்கட்டும் !

ஆக்ஷன் மாஸ்டர் ‘ஸ்டண்ட்’ சில்வா வின் இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக் ஷன் படத்தையே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவர் இலக்கத்தில் 2வது படம் நாம் எதிர்பார்க்கும் படி ஆக் ஷன் ஓரியண்டட் ஆக் இருக்குமா ? இல்ல அவரது இயக்கத்தில் வெளி வந்த முதல் படம் ‘சித்திரை செவ்வானம்’ மாதிரியே ஸ்டோரி ஓரியண்டட் மூவியாகவே இருக்கு மா.?! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !!

😜😎🤓😇😄😃😄😇🤓😎😜